மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம்
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம்
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கவுள்ளது.

விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் காலை 11 மணியளவில் நடை பெற உள்ளது. அதன்படி விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், கண்ட மங்கலம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட் டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்), செஞ்சி கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 19-ந் தேதி யும் (செவ்வாய்க்கிழமை), திண்டிவனம் கோட்ட அளவிலான குறை கேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 26-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று (அலுவலக நாளில்) கூட்டம் நடைபெறும். இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story