தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி
X

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.


தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி தெர்மல் நகர் மனமகிழ் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி தெர்மல் நகர் மனமகிழ் மன்றம் சார்பாக மறைந்த கால்பந்தாட்ட வீரர் கருப்பசாமி நினைவாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கருப்பசாமி செவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன. இதில், பொன்னுரங்கம் கால்பந்தாட்ட அணி முதல் பரிசை வென்றது. கருப்பசாமி நினைவு கால்பந்தாட்ட அணி இரண்டாவது பரிசையும், ஏஎஸ்எப்சி அணி மூன்றாவது பரிசையும், சாமி ஜேஆர் அணி நான்காவது பரிசையும் வென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மருத்துவர் மகிழ் ஜீவன், அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் ஜஸ்டின் ஜகதீப் குமார், மேற்பார்வை பொறியாளர்கள் ஏ. சிவக்குமார், எம்.கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை வழங்கினர். விழாவில் அனல்மின் நிலைய செயற்பொறியாளர் சின்னையா, முதுநிலை விளையாட்டு அலுவலர் மங்களா எஸ்.ஜெயபால், கணேசன், லீலா குழுமத்தின் இயக்குனர் திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மனமகிழ் மன்ற பொதுச் செயலாளர் ராபின், விளையாட்டு துறை செயலாளர் நேசன் ராபர்ட் கென்னடி, கலைத்துறை செயலாளர் ஜவஹர், மற்றும் சஞ்சய் தலைமையிலான தெர்மல் நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story