வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு - ஆட்சியர் துவக்கி வைப்பு

வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு - ஆட்சியர் துவக்கி வைப்பு
பயிற்சி வகுப்பு 

“கற்றது ஒழுகு” என்ற தலைப்பில், சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல்கள் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்கான வட்டார அளவிலான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக, பள்ளி மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டிய சாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கம், போதைப்பொருட்களை தடுத்தல், குழந்தைத் திருமணம், சாலைப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ‘கற்றது ஒழுகு” என்ற தலைப்பில், சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல்கள் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும் புதிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வட்ட அளவிலான குழுவிற்கும், அனைத்து அரசுப்பள்ளிகளை சார்ந்த பொறுப்பு அலுவலர்களுக்கும் வட்டார அளவிலான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் துவக்கி வைத்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல், அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.

Tags

Next Story