மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 11.12.2023 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தேனி மாவட்டம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 11.12.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (National Council for Vocational Training - NCVT) மற்றும் தொழில் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (State Council for Vocational Training - SCVT) முறையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ-இல் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற / பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். ஐடிஐ-இல் சேர்ந்து பயிற்சி பெற இயலாத 8, 10, 12-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்கல்வி தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சியும் (Apprenticeship Training) பெற்று, தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.8,050/- வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story