பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - எஸ்பி

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - எஸ்பி

எஸ்பி ஹர்ஷ் சிங்

புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் நாகை மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் வகையில் ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

1 ) 31.12.2023 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

2) நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

3) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில்சுமார் 500 காவலர்கள் மற்றும் சுமார் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

4) நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் பத்து தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அண்டை மாநிலமான பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவதை தடுக்கும் நோக்கில் வாகன சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5) மதுபானம் அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

6) இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லவோ, சாகசம் செய்யவோ கூடாது, மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

7) அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வேளாங்கண்ணி கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

8) கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சியின் போது அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

9) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags

Next Story