தீவட்டிப்பட்டி திருவிழாவில் கலவரம்: விஸ்க சார்பில் ஆர்ப்பாட்டம்

தீவட்டிப்பட்டி திருவிழாவில் கலவரம்: விஸ்க சார்பில் ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தீவட்டிப்பட்டி திருவிழாவில் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தீவட்டிப்பட்டி திருவிழாவில் கலவரம்- கண்டித்து ஆர்ப்பாட்டம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியில், கோவில் திருவிழாவில் அப்பாவி தலித் மக்கள் மீது இளைஞர்கள், பெண்கள் மீதும் சாதி வெறியாட்டம் நடத்திய சாதிய கும்பலை கண்டித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஏவிஎம் கார்னர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டபொருளாளர் சதீஷ் நிலவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில் திருவிழாவில் அப்பாவி தலித் மக்கள், இளைஞர்கள், பெண்கள் மீதும் சாதிய வெறியாட்டம் நடத்திய சாதிய கும்பலை கண்டித்தும், சாதி வெறியாட்டத்திற்கு உறுதுணையாக இருந்த சேலம் மாவட்ட காவல்துறையை கண்டித்தும், தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மே

லும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரவக்குறிச்சி நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story