தீபாவளி : அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்

தீபாவளி : அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கிய தொண்டு நிறுவனம்

மாணவர்களுக்கு புத்தாடை 

ஆரணி அருகேயுள்ள காமக்கூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடை வழங்கப்பட்டது.
தி.மலை மாவட்டம் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு ஆரணி டீம் எவரெஸ்ட்தனியார் தொண்டு நிறுவனம் 100 மாணவர்களுக்கு ரூ70,000 மதிப்பில் தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு புத்தாடை வழங்கினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் கண்ணா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.இத்தொண்டு நிறுவனம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மாணவர்களுக்குப் புத்தாடை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story