தீபாவளி போனஸ் - முதல்வருக்கு தொழிலாளர்கள் அஞ்சல் அனுப்பி போராட்டம்

தீபாவளி போனஸ் - முதல்வருக்கு  தொழிலாளர்கள் அஞ்சல் அனுப்பி  போராட்டம்

அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் 

தஞ்சாவூரில் தீபாவளி போனஸ் கேட்டு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் கீழவாசல், சத்யா நகர், செவ்வப்பநாயக்கன்வாரி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம், திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பாப்பாநாடு, ஆம்பலாபட்டு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், கக்கரைக்கோட்டை உள்பட 50-க்கும் அதிகமான இடங்களில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்கள் சார்பில் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பி. செல்வம், எம்.சிகப்பியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் கட்டுமான சங்க மாவட்டச் செயலர் ஆர்.தில்லைவனம், மாவட்டத் தலைவர் சேகர், நிர்வாகிகள் சீனி.சுகுமாரன், சௌந்தரராஜன், ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்டத் தலைவர் வெ. சேவையா, தெரு வியாபார சங்க மாவட்டச் செயலர் ஆர்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story