ராசிபுரம் சார்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் தீபாவளி கொண்டாட்டம்.

ராசிபுரம் சார்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் தீபாவளி கொண்டாட்டம்.

தீபாவளி கொண்டாட்டம் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு பட்டாசு, மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகளை கௌரவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காமராஜ், மற்றும் ராசிபுரம் குற்றவியல் வழக்கங்கள் சங்க தலைவர் வாசுதேவன், ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுச் செயலாளர் தங்கதுரை மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி உற்சாகமாக கொண்டாடினர்.

Tags

Next Story