தீபாவளி : ஆதரவற்றோருக்கு வேட்டி, சேலை வழங்கிய தே.மு.தி.க.வினர்

தீபாவளி : ஆதரவற்றோருக்கு  வேட்டி, சேலை வழங்கிய தே.மு.தி.க.வினர்
தேமுதிக
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தே.மு.தி.க.வினர் ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர். குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில், தீபாவளி திருவிழாவையொட்டி, வேட்டி, சேலை வழங்கும் விழா மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று, ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார். ஒன்றிய செயலர் மணியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story