கடலூர் மாவட்டத்தில் தீபாவளி தீ விபத்து விபரம்

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி தீ விபத்து விபரம்
தீ விபத்து 
கடலூர் மாவட்டத்தில் கடலூர் , திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகையின் போது 16 கூரை வீடுகள், 5 தென்னை மரங்கள், 3 குப்பை மேடுகள் எரிந்து சேதமடைந்தது. அந்த வகையில் விருத்தாசலம், சிதம்பரம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் தலா ஒரு கூரை வீடும், கடலூர் சிப்காட், சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் தலா 2 கூரை வீடுகளும், பண்ருட்டியில் 3 கூரை வீடு, ஒரு குப்பை மேடு மற்றும் கடலூரில் 3 தென்னை மரங்கள், 2 குப்பை மேடுகள், திட்டக்குடியில் ஒரு தென்னை மரம், வேப்பூரில் ஒரு தென்னை மரம் ஆகியவை எரிந்து சேதமடைந்ததாக, தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

Tags

Next Story