தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி
தீபாவளி பரிசு 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை திருமண மண்டபத்தில் தூய்மை பாதுகாவலர்களுக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் த.பிரபாவதி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பழனிசாமி முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பாதுகாவலர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு ஆகியவற்றை ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் மற்றும் வழக்கறிஞர் த.பிரபாவதி மற்றும் ஜெ.ஜனனி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றுபவர்கள், தூய்மை பணியாளர்களின் பொறுப்பாளர்கள் கிருபாகரன், சம்பத், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீபாவளி நேரத்தில் தூய்மை பணியை சிறப்பாக செய்ததற்காக தூய்மை பாதுகாவலர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கியதாக ஆசிரியர் கணேசன் கூறினார்.

Tags

Next Story