நெருங்கும் தீபாவளி - சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

நெருங்கும் தீபாவளி - சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

ஆடு விற்பனை 

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளை விரும்பி உண்பர். இதனால் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள சந்தை வழக்கம் போல் இன்று கூடியது. இதில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story