தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் !

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் !

தேமுதிக

சாத்தூர் கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன். விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.விஜய பிரபாகரன் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னக்காமன்பட்டி மேட்டமலை வெங்கடாசலபுரம் படந்தாள் அண்ணா நகர் அமீர்பாளையம் சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின் போது பேசிய விஜய பிரபாகரன் நான் சென்னை வாசியாக இருந்தாலும் எனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தனாக இருந்து உங்களுக்கான சேவகன் ஆக இருந்து பணியாற்றுவேன் என்று இப்பகுதியின் பிரதான தொழிலாக விளங்கும் பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள பாடுபடுவேன் என்றார். அதேபோல எவ்வாறு தமிழக மக்கள் இதயத்தில் வாழும் எனது தந்தை விஜயகாந்த் போல நானும் மக்கள் மனதில் வாழ இறுதிவரை பாடுபடுவேன் என்றார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட பகுதிகளில் அனைத்திலும் விஜய பிரபாகரனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது பொதுமக்கள் பெண்கள் என அனைவரும் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்றனர் சாலை ஓரமெங்கும் கையில் கட்சி கொடியுடன் வரவேற்றனர்.

Tags

Next Story