தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சாமி தரிசனம்

ஆத்தூர் முத்து மலை முருகன் கோவிலில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்து மலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது.இந்நிலையில் சேலம் வாழப்பாடி ஆத்தூர் தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேமுதிக இல்ல நிர்வாகிகள் விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வருகை தந்தார். தொடர்ந்து முத்து மலை முருகன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து மூலவரான முத்துமலை முருகனை சுதீஷ் தரிசனம் செய்தார் அவருடன் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story