தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்

தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்

கோவிமுருகன்

தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்.
கள்ளக்குறிச்சி தே.மு.தி.க., மாவட்ட அவைதலைவர் கோவிமுருகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார். கள்ளக்குறிச்சி தே.மு.தி.க., மாவட்ட அவைதலைவர் கோவிமுருகன். , அக்கட்சி துவங்கிய நாளிலிருந்து தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும் தியாகதுருகம் பேரூராட்சி 14வது வார்டில் இவரது மனைவி ஜெகதீஸ்வரி தே.மு.தி.க., கவுன்சிலராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தியாகதுருகம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டில் 14ல் தி.மு.க., வெற்றி பெற்ற போதும் 14வது வார்டில் ஜெகதீஸ்வரி தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தல் முடிந்த கையோடு கோவிமுருகனை தி.மு.க.,வில் கொண்டு வரும் முயற்சியை தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோவிமுருகன் அக்கட்சியில் இணைந்தார்.

Tags

Next Story