திமுக - அதிமுக மோதல்; பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி

திமுக - அதிமுக மோதல்;  பாதிக்கப்பட்ட  நபர் மருத்துவமனையில் அனுமதி

 மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் வாக்குசாவடி முன்பு திமுக பிரமுகரை அதிமுகவினர் தாக்கியதால், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் வாக்குசாவடி முன்பு திமுக பிரமுகரை அதிமுகவினர் தாக்கியதால், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பூம்புகார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருவிளையாட்டம் செளரிராஜன் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருவிளையாட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்.30). திமுக கிளைசெயலாளாரான இவர் தனது வயது முதிர்ந்த உறவினரை ஓட்டு போட அழைத்து வந்துள்ளார். அதனை ஏற்காத அதிமுகவை சேர்ந்த இளையராஜா, இளந்தமிழன், கண்ணன் ஆகிய 3 பேர் சேர்ந்து வாக்குசாவடி மையத்தில் வாசலில் அருணை தாக்கியுள்ளனர்.

காயமடைந்த அருணை கட்சியினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். அருண் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யகோரி இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் துணைரானுவப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். பெரம்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனையால் அரைமணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story