நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக செயல் வீரர்கள் ௯ட்டம்

X
பைல் படம்
ஆத்தூரில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், நகர ,ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று மாலை 4.00 மணி அளவில் ஆத்தூர் துளுவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ( BLA2),மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான (BLC), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணார் எஸ். ஆர் .சிவலிங்கம் தலைமையிலும்,ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைமை கழக பார்வையாளர் டாக்டர் ராஜேஷ்பாபு, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மாவட்டக் கழக பார்வையாளர் ஆத்தூர் ஸ்ரீராம் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து BLA2 மற்றும் BLC உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
