ஆவடி தொகுதியில் திமுகவினர் பிரச்சாரம்

ஆவடி தொகுதியில் திமுகவினர் இல்லம் தேடி முதல்வர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம்பேடு கிராமத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆணந்த் தலைமையில் இல்லம் தேடி முதல்வர் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு இல்லம் தேடி முதல்வர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை பொதுமக்களிடத்தில் காணொளி வாயிலாக ஒளிபரப்பு செய்தும், முதல்வரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியும் பிராச்சாரம் செய்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு மற்றம் கழக நிர்வாகிகள், இளைஞர்கள், மகளீரணியினர் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story