பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவினர்

பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவினர்

பிரச்சாரம் 

பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவினர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை கிராமத்தில், திமுக ஆட்சி இரண்டரை ஆண்டு சாதனைகளையும், விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்தும் வகையில், இன்று காலை மத்திய திமுக பொருப்பாளர் தளபதி செல்வம், மற்றும் திமுக நிர்வாகிகள் பொது மக்களுக்கு எடுத்துரைத்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.. பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டனர்..

Tags

Next Story