திமுக வேட்பாளர் ரிஷிவந்தியத்தில் பிரச்சாரம்

திமுக வேட்பாளர் ரிஷிவந்தியத்தில் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் மலையரசன், ரிஷிவந்தியம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.


கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் மலையரசன், ரிஷிவந்தியம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் மலையரசன், ரிஷிவந்தியம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தமிழக முதல்வராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மகளிர் உதவித்தொகை, காலை சிற்றுண்டி திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், புதுமைப்பெண் திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள் உட்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி தொடர, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து மலையரசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார். ஓட்டு கேட்டுச் சென்ற வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதேபோல், சித்தப்பட்டினம், முருக்கம்பாடி, கொங்கனாமூர், அத்தியந்தல், மேலந்தல், ஜம்பை, பள்ளிச்சந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் நடந்தது.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாலாஜி பூபதி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story