செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட கடலூர் சின்னகுப்பம், பெரிய குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புற மீனவ பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம் அவர்கள் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்னக்குப்பம், பெரிய குப்பம் மற்றும் கூவத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள மீனவ பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் செல்வத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலூம் மீனவ பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் செல்வத்துக்கு சால்வையுடன் ரோஜா மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பிரச்சாரத்தின் போது காஞ்சி தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏ வுமான க. சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு, ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட இந்தியா மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story