வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், உதயேந்திரம், சி.வி.பட்டறை, மேட்டு தெரு, உள்ளிட்ட பகுதிகளில்,

வேலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த வாக்கு சேகரிக்கும்போது, பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், போது நகர செயலாளர் சாரதிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்..

Tags

Next Story