விவசாய டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

விவசாய டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த  திமுக வேட்பாளர்!

திமுக 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் விவசாய டிராக்டரில் சென்று வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், கருங்குழி,மொறப்பாக்கம் தண்டலம்,கழனிபாக்கம்,வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது தண்டலம் என்ற இடத்தில் விவசாய டிராக்டரில் சென்றபடி வாக்கு சேகரித்தார்..அப்போது அவர் பேசுகையில் நான் வேட்பாளராக வரவில்லை ஒரு விவசாயியாக வந்துள்ளேன் நானும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த விவசாயி குடும்பத்தில் பிறந்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் எனகூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்புரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கா. சுந்தர் எம்எல்ஏ அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.தம்பு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story