நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் மகனும், சிட்டிங் எம்பியுமான கதிர் ஆனந்த் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் குடியாத்தம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உள்ள தொண்டான்துளசி, பணமடங்கி, பரதராமி, கள்ளப்பாடி, காளியம்மன் பட்டி, செங்குன்றம், செம்பேடு, கீழ ஆலத்தூர் போன்ற பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது காளியம்மன்பட்டி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் கூடத்திற்கு சென்ற கதிர் ஆனந்த் கைத்தறி நெசவு செய்தவாறு நெசவாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story