திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !

திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !

 திமுக

திருச்செங்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருச்செங்கோடு நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகேநாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் திமுகவினர் வெற்றியை கொண்டாடினார்கள். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பேருந்துகளில் சென்ற பயணிகளுக்குநகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,நகர திமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன்,நகர திமுக அவை தலைவர் மாதேஸ்வரன், நகரத் துணைச் செயலாளர் ராஜவேல், கலைவாணி இளங்கோ,நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர துணைச் செயலாளர் மாதேஸ்வரன்,நகர பொருளாளர் பெருமாள், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா, அடுப்பு ரமேஷ், தாமரைச் செல்வி மணிகண்டன், செல்வி ராஜவேல்,மற்றும் மகளிர் அணியினர் சார்பணி நிர்வாகிகள் என 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story