செங்கல்பட்டில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து செங்கல்பட்டில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதையும்,காஞ்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் க.செல்வம் வெற்றி பெற்றதையும் தொடர்ந்து,செங்கல்பட்டு நகர கழகம் சார்பில்,நகர கழக செயலாளர் நரேந்திரன் ஏற்பாட்டில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில், செங்கல்பட்டில் உள்ள அறிஞர் அண்ணா,பெரியார், இராஜீவ் காந்தி,அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் உருவ சிலைக்கு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்,துணைதலைவர் அன்புசெல்வன், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள் உடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பட்டாசுகள் வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

Tags

Next Story