திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

திமுக

குமாரபாளையத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வாக்கு இன்னும் பணி காலை முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில் திமுக வெற்றி முகத்தில் உள்ளதை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகர திமுக அமைப்பாளர் ஞானசேகரன் தலைமையில் திமுகவினர் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தெற்கு நகர பொறுப்பாளர்கள் கே ஏ ரவி தர்மன் ஜோதிமணி செந்தில் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story