அரூர் சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று திமுகவினர் வாக்கு சேகரிப்பு

அரூர் சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று திமுகவினர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

மொரப்பூர் ஒன்றியம் செங்குட்டை பகுதியில் தர்மபுரி திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி - மொரப்பூர் ஒன்றியம், செங்குட்டை பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் பகுதியில் வீடு வீடாக சென்று சென்று திமுக அரசின் சாதனைகளான, மகளிர்க்கு இலவச பேருந்து திட்டம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை வழியாக மாதம் ஆயிரம் ரூபாய், இல்லம் தேடி மருத்துவத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து திமுக வேட்பாளர் ஆர் மணியை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் குட்டி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story