திமுகவினர் துண்டறிக்கைகள் வழங்கி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு !

திமுகவினர் துண்டறிக்கைகள் வழங்கி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு !

 வாக்கு சேகரிப்பு

ஒசூர் மாநகராட்சி 8வது வார்டில் திமுகவினர் வீடு வீடாக துண்டறிக்கைகள் வழங்கி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
ஒசூர் மாநகராட்சி 8வது வார்டில் திமுகவினர் வீடு வீடாக துண்டறிக்கைகள் வழங்கி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்தநிலையில் கடைசி கட்ட பிரச்சாரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வரும்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒசூர் மாநகராட்சி, 8வது வார்டிற்குட்பட்ட பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசுலு அவர்களின் தலைமையில் திமுக மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் K.S.கலாவதி, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் ராணி உள்ளிட்ட திமுகவினருடன் விசிக நாகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

Tags

Next Story