மோடி சுட்ட வடைகளை விநியோகித்த திமுகவினர்

மோடி சுட்ட வடைகளை விநியோகித்த திமுகவினர்
நாகர்கோவிலில் உளுந்து வடையுடன் நூதன துண்டு பிரசுரம் வெளியிட்ட திமுக
நாகர்கோவிலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடியை கண்டித்து மோடி சுட்ட வடைகள் என்ற பிரச்சாரத்தை திமுகவினர் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அதனை நிறைவேற்றாததை கண்டித்தும், இது மோடி சுட்ட வடை என்று பிரதமர் மோடி அறிவித்து நிறைவேற்றாத திட்டங்களை பட்டியலிட்டும், திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ் துண்டு பிரசங்கங்களுடன் உளுந்து வடை சேர்த்து பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் மேயர் மகேஷ் கூறுகையில், _ மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும், நாட்டின் கடன் 150 லட்சம் கோடி திரும்ப செலுத்தப்படும், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் தரப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை தந்து விட்டு பிரதமர் இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் வரும் போதெல்லாம் வடை சுட்டீங்க.... சொன்னது எப்போது செய்யப் போறீங்க என்ற பெயரில் இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், இளைஞர் அணி நிர்வாகி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story