திமுக செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

திமுக செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

செயற்குழு கூட்டம்


சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வாழப்பாடியில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. இதற்கு அவைத்தலைவர் மு.ரா.கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி துணை அமைப்புகளான அனைத்து சார்பு அணிகளின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் வருகிற 20-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை, 21-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு குறித்து ஆலோசனை, பொங்கல் விழா, கட்சி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story