திரிகூடபுரத்தில் திமுக திண்ணை பிரச்சாரம்

திரிகூடபுரத்தில் திமுக திண்ணை பிரச்சாரம்
பிரச்சாரம் 
கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் திமுக சார்பாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் வீடு வீடாக மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில் திண்ணை பிரச்சாரமானது முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story