விழுப்புரத்தில் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் திமுக பொதுக்கூட்டம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம்

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., வெளியிட் டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கு துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை தாங்குகிறார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நா.புகழேந்தி எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.உதயசூரியன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜே.மணிக்கண்ணன், இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு, வடக்கு மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story