கிருஷ்ணகிரியில் திமுக பொதுக்கூட்டம் - அமைச்சர்கள் துரைமுருகன்,சக்கரபாணி பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் திமுக பொதுக்கூட்டம் - அமைச்சர்கள் துரைமுருகன்,சக்கரபாணி பங்கேற்பு

திமுக பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் உள்ள தேவராஜ் திடலில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி. மு. க சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும்போது மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. எனவே மக்கள் விரோத போக்கை கடை பிடிக்கும் மத்திய பா. ஜனதா அரசை அகற்ற இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். என்றார். அமைச்சர் சக்கரபாணி எம். எல். ஏ. க்கள் மதியழகன், ஒய். பிரகாஷ், மேயர் சத்யா பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story