மாணவர்கள்- பெற்றோர்களை திமுக அரசு குழப்பி வருகிறது.ஜி.கே.வாசன்

மாணவர்கள்- பெற்றோர்களை திமுக அரசு குழப்பி வருகிறது.ஜி.கே.வாசன்


ஜி.கே.வாசன்


திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் துவங்கி ரத்து செய்வதை போல மக்களை குழப்பி பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது, மாணவர்களிடம் அரசியலை புகுத்த வேண்டாம், தேர்தலுக்காக இது போன்ற அரசியலை செய்து மாணவர்களையும் பெற்றோர்களையும் திமுக தொடர்ந்து குழப்பி அலைக்கழித்து வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கோவை:இராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் 10ஆம் ஆண்டுவிழா,பொங்கல் நலதிட்டம் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமாக தலைவர் ஜி.கே வாசன் மருத்துவ படிப்பிற்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு இலவச வினா விடை புத்தகங்களை வழங்கினார்.மேலும் இளைஞர் அணியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவமுகாமையும் பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன்.கோவையில் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்ப்பதாகவும் விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றவர் தற்போது கோவை மாவட்டத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது எனவும், பேச்சு வார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த 7.5%சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மருத்துவ மாணவர்களின் வரப்பிரசாதமாக இருந்துள்ளது.திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து துவங்கி ரத்து செய்வதை போல மக்களை குழப்பி பெற்றோர்களை அலைக்கழித்து வருவதாகவும் மாணவர்களிடம் அரசியலை புகுத்த வேண்டாம் என்றவர் தேர்தலுக்காக இது போன்ற அரசியலை செய்து மாணவர்களையும் பெற்றோர்களையும் திமுக தொடர்ந்து குழப்பி அலை கழித்து வருகிறது என தெரிவித்தார். தமிழக முழுவதும் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும் டாஸ்மார்க் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும் அதனால் தான் தமிழகத்தில் இதன் காரணமாக போதை பழக்கம அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். கிளாம்பாக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் தேர்தல் நெருங்கி வருவதை கணக்கில் கொண்டு அவசரகதியில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளதாகவும் இதனால் மக்கள் அவதிப்படுவதாக கூறியவர் இவ்வளவு அவசரகதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான அவசியம் என்ன? கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story