அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு: வேட்பாளர்

அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு: வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

தர்மபுரி அடுத்த புலிக்கரை, மோதுர், குப்பாங்கரை, பேகாரஅள்ளி ஆகிய பகுதியில் அதிமுக வேட்பாளர் அசோகன் இரட்டை இலை சின்னத்திற்க்கு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.அசோகன் தர்மபுரி அடுத்த புலிக்கரை, மோதுர், குப்பாங்கரை, பேகாரஅள்ளி ஆகிய பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்க்கு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயத்தை காக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் புலிக்கரை ஏரியை தூர்வாரி 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்தது.

ஆனால் அதற்கு பின்னர் வந்த திமுக அரசு 2 ஆண்டுகளாக இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கு பாடம் புகட்ட, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில் அதிமுக விவசாய அணி செயலாளர் ஆசிரியர் அன்பழகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story