சாராய ஆலைகளை வைத்து திமுக அரசு பொழப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி

சாராய ஆலைகளை வைத்து திமுக அரசு பொழப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி


சாராய ஆலைகளை வைத்து திமுக அரசு பொழப்பு நடத்துவதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற வாக்காளர்கள் முகவர் கூட்டம் இதில் ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் பொழுது மது கடைகளை மூட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

புதிய தமிழகம் கட்சியின் 26 ஆம் ஆண்டு துவக்க விழா வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது அப்பொழுது பூரண மதுவிலக்கு அமல்படுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் மேலும் தமிழக அரசு மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதன நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை திமுக அரசு அடியோடு அகற்ற வேண்டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

ஒரு போலி மதுபான ஆலை நடத்துகின்ற அளவுக்கு தமிழகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது அமலாக்கத்துறை ஒரு எம்பி வீட்டில் சோதனை செய்து 500 கோடி ரூபாய் வரியை ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது திமுக அரசு இதுபோன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபடுகிறது இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்

Tags

Next Story