கள்ளச்சாராயத்தை தடுப்பதில் திமுக அரசு மெத்தனம்: பாஜக குற்றச்சாட்டு
![கள்ளச்சாராயத்தை தடுப்பதில் திமுக அரசு மெத்தனம்: பாஜக குற்றச்சாட்டு கள்ளச்சாராயத்தை தடுப்பதில் திமுக அரசு மெத்தனம்: பாஜக குற்றச்சாட்டு](https://king24x7.com/h-upload/2024/06/27/565075-1000072590.webp)
கள்ளச்சாராயத்தைத் தடுக்க திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காததே, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணம் என்று பாஜக மகளிரணி மாநிலத் தலைவா் உமாரதி குற்றஞ்சாட்டினாா்.
தென்காசி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய துயரம். மாவட்ட ஆட்சியா், காவல் துறையினரை மாற்றுவதால் எந்த பயனும் கிடையாது. தமிழகத்தில் இதுபோன்று இன்னொரு சம்பவம் நிகழக்கூடாது,
என்பதற்காகத்தான் பாஜக எதிா்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டபோது, கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவோம் என திமுக அரசு கூறியது. ஆனால், இவ்விஷயத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் இப்போது 60 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளச்சாராய சம்பவத்தின் பின்புலத்தில் திமுகவினா் உள்ளனா் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாா். தென்காசி மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச்செயலா் ராமநாதன், மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன், வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலா் கோதை மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.