சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!

சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!

பொதுக்கூட்டம்

சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சேகர் பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, மதிமுக வின் வடசென்னை மாவட்டச் செயலாளர் சகோதரர் சு.ஜீவன் எம்.சி., பகுதிக் கழகச் செயலாளர்கள் வே.வாசு, 8வது மண்டலக் குழுத் தலைவர் கூ.பி. ஜெயின் எம்.சி., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story