கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. - அ.தி.மு.க. தீவிர பிரசாரம் !

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. - அ.தி.மு.க. தீவிர பிரசாரம் !

பிரசாரம்

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டச் செயலாளராக உள்ள இவர் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் கோஷ்டி பூசலை மறந்து அனைவரும் கைகோர்த்துள்ளது குமரகுருவுக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. இதனை முறியடித்து வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கின்ற முனைப்புடன் தி.மு.க ., நிர்வாகிகள் களப்பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். அமைச்சர் வேலு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., சிவலிங்கம் ஆகியோர் நேரடியாக களமிறங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை போல் ஒவ்வொரு ஊரிலும் கிளை வாரியாக வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர். நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் வீதி வீதியாக சென்று உள்ளூர் நிர்வாகிகள் தலைமையில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் நாளுக்கு நாள் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.

Tags

Next Story