ஓமலூரில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்

ஓமலூரில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஓமலூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் டேம் வெங்கடேசன், ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரி ஆகியவற்றை வழங்கினார்.

இதில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி, சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story