சமூக நீதி காப்பதில் வழிகாட்டியாக உள்ள திமுக -அந்தியூர் செல்வராஜ்

சமூக நீதி காப்பதில் இந்திய துணை கண்டத்தில் திமுக வழிகாட்டியாக உள்ளது என அந்தியூர் செல்வராஜ் கூறினார்.

சமூக நீதி காப்பதில் இந்திய துணை கண்டத்தில் திமுக வழிகாட்டியாக உள்ளது- அந்தியூர் செல்வராஜ். கரூர் மாவட்டம், புகலூர் நகர திமுக சார்பாக ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் நேற்று இரவு நடைபெற்றது.

புகலூர் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மோடி முகமூடி அணிந்து மோடி சுட்ட வடை வழங்கி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கூட்டத்தில் பங்கேற்ற துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது, சமூக நீதி காப்பதில் இந்திய துணைக்கண்டத்தில் திமுக வழிகாட்டியாக உள்ளது எனவும், எல்லா சமுதாய மக்களுக்கும் சமுதாயம் சார்ந்த முன்னேற்றத்தை தந்தவர் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் என தெரிவித்த அவர், பல்வேறு சமுதாயத்தினர் இன்று பல்வேறு துறைகளில் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர் என்றால் அதற்கு காரணம், கலைஞர் கொண்டு வந்த சமூக நீதி திட்டம் தான் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அரவக்குறிச்சி தேர்தல் பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி , ரமேஷ் பாபு, மாவட்ட தொமுச தலைவர் அண்ணாவேலு , கழக தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கலாவதி சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story