துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வரும் திமுகவினர் !

துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வரும் திமுகவினர் !

திமுக

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுகவினர் வீடு, வீடாக சென்று திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக நகர செயலாளரும், நகராட்சித் தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என ஏராளமானங கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்

Tags

Next Story