திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
சங்கரன்கோவில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா ஈஸ்வரன் கலந்து கொண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வழக்கறிஞர்களின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story