ஒசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

ஒசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

கோப்பு படம் 

ஒசூர் அருகே திமுக பிரமுகர் நிலத்தகராறு முன்விரோதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனை முன்பு திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(35).. இவர் சூளகிரி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்துள்ளார்.. பைனான்ஸ் ரியல் எஸ்டெட் செய்து வந்த கார்த்திக், திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் என்பவர் அண்ணன் (பெரியம்மா மகன்) என்பதால் திமுகவில் முக்கிய புள்ளியாக வளம் வந்துள்ளார்.

இவருக்கும் கர்நாடகா மாநிலம் அனிகிரிப்பள்ளியை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்தநிலையில் பேரிகை அடுத்த சூலகுண்டா என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக்கை, பிரதாப் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

கார்த்தியை அப்பகுதியினர் மீட்டு ஒசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்ததாக தகவல் பரவிய நிலையில் ஒசூர் MLA பிரகாஷ், ஒசூர் மேயர் சத்யா உள்ளிட்ட 200க்கும் அதிகமான திமுகவினர் தனியார் மருத்துவமனை முன்பு குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது கார்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பேரிகை போலிசார் விசாரித்து வருகின்றனர் பிரதாப் உடனிருந்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என விசாரணை தீவிரமடைந்துள்ளது

Tags

Next Story