தேமுதிக தலைவர் விஜயகாந்த் 30வது நாள் நினைவு அமைதி ஊர்வலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 30வது நாள் நினைவு அமைதி ஊர்வலம்

அமைதி ஊர்வலம்

தூத்துக்குடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 30வது நாள் நினைவு அமைதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி பெரியார் சிலை முன்பு தொடங்கிய பேரணிக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருஉருவ படத்திற்கு அனைத்து கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன், அதிமுக கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பிஜேபி மாவட்ட தலைவர் சித்ராங்கன், தமுமுக அகம்மது இக்பால், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாத்துரை, மதிமுக முருருகபூபதி, நக்கீரன், சிபிஐ ஞானசேகரன், சிபிஎம் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், அமமுக மாவட்ட செயலாளர் பிரைட்டர், ஐஜேகே தென்மண்டல அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர் பிஷ்மி, மக்கள் நீதி மய்யம் ஜவஹர், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் விஜய் ஆனந்த், உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story