திமுக என்றாலே லஞ்சம்,ஊழல், துஷ்பிரயோகம்-வானதி சீனிவாசன்!

நிவாரண பொருட்களை அனுப்பி வாய்ப்பு

கோவை மாவட்ட பாஜக சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு போர்வை,புடவை,அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பாஜக சார்பில் அனுப்புவதாக கூறியவர் அவர்களுக்கு உதவிட கிடைத்தவ் ஒரு வாய்ப்பு என்றவர் பாஜக அதை முன் நின்று மக்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறது என்றார்.கோவையில் வசித்து வரும் வட இந்தியா வியாபாரிகள் இந்த பொருட்களை வழங்கி உதவியுள்ளனர்
என தெரிவித்தவர்வ் மேலும் 1500 கிலோ அரிசி மூட்டைகளை சேகரித்து அனுப்பி வைக்கபடும் என்றார்.வடக்கு-கிழக்கு என பிரித்து பேசுகின்றவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் உதவி செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்றவர் அவர்களது எண்ணத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரிவினை வாதமாக மக்களுடைய சிந்தனையை திசை திருப்பக் கூடாது என தெரிவித்தார். திமுக அமைச்சர் பொன்முடி தண்டனை குறித்து பேசியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற போது அமைச்சர் பதவியில் அவரை நீக்காமல் இலக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வருவது மிகப்பெரிய அவமானம் எனவும் மற்றொரு அமைச்சர் தண்டிக்கப்பட்டு உள்ளார்.இவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு மாநிலத்தின் முதல்வர் நேர்மையாக ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்தவர் பாஜக பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஊழலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டு இருக்கிறோம் எனவும் நீதிமன்ற தீர்ப்பு அதனை உறுதி செய்து உள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் இந்த வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி ஒரு மாத காலத்திற்குள் ஓய்வு பெறக் கூடிய நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி அவரது வீட்டில் கர்நாடக காவலர்கள் விசாரணை குறித்த கேள்விக்கு திமுக என்றாலே லஞ்சம் ஊழல் துஷ்பிரயோகம் என விமர்சித்தார்.


