கடவூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கடவூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடவூர் தெற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மற்றும் பிஜேபி தலைமையில் அணிகள் அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், அப்பகுதியில் உள்ள செந்தூர் முருகன் திருமண மண்டபத்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் முரளி கலந்து கொண்டு, கட்சியின் கொள்கை குறித்தும் தேர்தலின் போது செயல்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விவரித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, தேர்தலின் போது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகள் பெறுவதற்கான வியூகங்களை விளக்கி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திருவேங்கடம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கரிகாலன் மற்றும் ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு செயல் வீரர்கள் கூட்டத்தை சிறப்பித்தனர்.

Tags

Next Story