திமுக நிர்வாகிகள் ஒரு லட்ச மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்

திமுக நிர்வாகிகள் ஒரு லட்ச மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்

திமுக நிர்வாகிகள் ஒரு லட்ச மரக்கன்றுகளை இலவசமாக பெற்று நட்டு பராமரிக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.


திமுக நிர்வாகிகள் ஒரு லட்ச மரக்கன்றுகளை இலவசமாக பெற்று நட்டு பராமரிக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.
ஈரோடு மாவட்டம் மேட்டுக் கடையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற உழைத்த இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளு க்கு நன்றி தெரிவிக்கும் செயல் வீரர்கள் கூட்டம் திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான சு.முத்துசாமி கலந்து கொண்டு நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே. ஈ.பிரகாஷ் , மற்றும் தி மு க மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுமார் 45 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்து கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் கடும் கோடையை சமாளிக்க ஒன்றியம், பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் தங்களால் எவ்வளவு மரங்களை நட்டு பராமரிக்க முடியும் என்ற பட்டியலை மாவட்ட திமுகவில் அளித்து மரக்கன்றுகளை இலவசமாக பெற்று சென்று பராமரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார் மறைந்த திமுகவினருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது இக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், பேரூர் வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக சார்பு அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story